இலங்கை செய்தி

988 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு

வெசாக் போஹோவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய 982 ஆண் கைதிகள் மற்றும் 06 பெண் கைதிகள் உட்பட 988 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இது தவிர போஹோ தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (05) மற்றும் நாளை (06) ஆகிய இரு தினங்களில் கைதிகளை பார்வையிடுவதற்கு கைதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த இரண்டு நாட்களிலும் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொட்டலங்கள் மற்றும் இனிப்புகளை ஒருவருக்கு மட்டும் போதுமானது என்ற வகையில் வழங்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content