ஐரோப்பா

நேற்றிரவு உக்ரைன் மீது ரஷ்யா வான் வழித் தாக்குதல் 9 உக்ரேனியர்கள் பலி

உக்ரேனில் நேற்றிரவு ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கியேவ் உட்பட பல இடங்கள் மீது நேற்றிரவு ரஷ்யா வான் வழித் தாக்குதல்களை நட்ததியது. உமான் நகர் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள், குடியிருப்புக் கட்டடங்களைத் தாக்கியுள்ளன.இதனால் 7 பேர் காயமடைந்ததுடன் மேலும் பலர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டினிப்ரோ நகரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்ணொருவரும் அவரின் 3 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மேயர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கியேவ் மீது 51 நாட்களின் பின்னர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதேவேளை 51 நாட்களின் பின்னர், கியேவ் மீது எதிரியின் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இராணுவ நிர்வாகத்தின் தலைவர் சேர்ஜி பொப்கோ கூறியுள்ளார்.

அதேசமயம் , தலைநகர் கியேவ்வில் ரஷ்யாவின் 21 ஏவுகணைகளையும், இரு ட்ரோன்களையும் தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content