செய்தி தமிழ்நாடு

30 அடி கீழே விழுந்து பெண் பலி

சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம் மேம்பாலம் மீது இருசக்கர வாகனத்தில் சந்தோஷபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(21), மற்றும் அவரது அக்கா கலைச்செல்வி(26),

இருவரும் பாலத்தில் மீதேறி பள்ளிகரணை நோக்கி வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி மேம்பாலத்தின் மேலிருந்து 30 அடி கீழே தூக்கி வீசப்பட்டார்.

அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாகனத்தை ஓட்டி வந்த சந்தோஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின்னர் மேல் சிகிச்சைகாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரும் ஆயுதப்பட்டை உதவி ஆய்வாளர் குமரவேல் என்பவரின் பிள்ளைகள் என தகவல்.

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஆலம்(26), என்பவரை கைது செய்து பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content