இலங்கை

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைதியின்மை! இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கை, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக் தெரிவித்து நேற்று விமான நிலையத்தில் அமைதியின்மை பதிவாகியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இன்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விசா வழங்குவதை இந்திய நிறுவனங்கள் மேற்கொள்வது தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர், குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல என்பதால், இந்தியாவைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் தேவையற்றது என்று கூறியுள்ளார். “கொழும்பு […]

இலங்கை

மே 13 முதல் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் மீள ஆரம்பம்

  • May 2, 2024
  • 0 Comments

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

விண்வெளியில் இருந்து பூமிக்கு கிடைத்த மர்ம சமிக்ஞை : நாசா வெளியிட்ட தகவல்!

  • May 2, 2024
  • 0 Comments

ஆழமான விண்வெளியில் இருந்து பூமிக்கு மர்மமான சமிக்ஞை கிடைத்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. தோராயமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உருவான இந்த சிக்னல், நாசாவின் புதிய விண்கலமான “சைக்கிலிருந்து” வந்துள்ளது. அக்டோபர் 2023 இல், நாசா ஒரு விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது. ஒரு விண்கலத்தை ‘சைக் 16’ என்ற சிறுகோள் நோக்கி அனுப்பியது. இது முதன்மையாக உலோகத்தால் ஆனது என்பதுடன் நமது சூரிய குடும்பத்தில் அரிதானது. இந்த சிறுகோள் செவ்வாய் மற்றும் […]

இலங்கை

யாழ்.காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!

வழித்தட அனுமதிகள் விற்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபாட்டதோடு ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து மேலும் தெரியவருவதாவது வழித்தட அனுமதி ,நேர அட்டவணை தொடர்பில் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அத்துமீறலை எதிர்த்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினால் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 40 வருடங்களாக காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கதில் காரைநகர் சிற்றூர்தி […]

பொழுதுபோக்கு

தளபதிக்கு NO, தலைக்கு OK சொன்ன ட்ரெண்டிங் நடிகை… வருத்தத்தில் ரசிகர்கள்!

  • May 2, 2024
  • 0 Comments

நடிகை ஸ்ரீலீலா விஜய் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாட மறுத்திருக்கிறார். அதேசமயம் அஜித்தின் புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தி கோட்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறாமல் போனது.இதனால், அடுத்து வரக்கூடிய பாடல்களாவது கொண்டாட்டமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் […]

இலங்கை

முல்லைத்தீவில் காணி பிரச்சினை குறித்து 130 நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் விசாரணை!

  • May 2, 2024
  • 0 Comments

முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக  வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , […]

வட அமெரிக்கா

அமெரிக்கா- அச்சுறுத்தும் வகையில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவன்… சுட்டு கொன்ற பொலிஸார்

  • May 2, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் என்ற பகுதியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பள்ளிக்கு ஒரு மாணவன் துப்பாக்கியுடன் வந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக செயல்பட்ட பொலிஸார் அந்த மாணவன் பள்ளிக்குள் நுழைவதற்குள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டனர். இதில், அந்த மாணவன் உயிரிழந்து விட்டான். எனினும், இந்த அச்சுறுத்தலான சம்பவத்தின்போது, வேறு மாணவர்களோ அல்லது காவல் அதிகாரிகளோ காயமடையவில்லை என விஸ்கான்சின் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் ஜோஷ் கவுல் […]

இலங்கை

இலங்கை: எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தற்போது ரூ.4,115 ஆக உள்ள 12.5 கிலோகிராம் எடையுள்ள எல்.பி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4,000க்கு கீழ் கொண்டு வரப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் எனவும் குறைக்கப்பட்ட விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

இங்கிலாந்தில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்பட கூடாது : எந்த கட்டண குறைப்பும் இடம்பெறாது என அறிவிப்பு

  • May 2, 2024
  • 0 Comments

இங்கிலாந்து வட்டி விகிதங்களை  மேலும் குறைக்கக் கூடாது என்று OECD எச்சரித்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) படி, 2008-க்குப் பிந்தைய காலகட்டத்தின் அதிகபட்சமான 5.25% வட்டி விகிதங்கள் அப்படியே பேணப்பட வேண்டும் என எச்சரித்துள்ளது. நிதி மற்றும் பணவியல் கொள்கை கலவையானது போதுமான அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பணவீக்கம் இலக்கை நோக்கி திரும்பும் வரை அது அப்படியே இருக்க வேண்டும்” என்று OECD இன் 2024 பொருளாதாரக் கண்ணோட்டம் கூறுகிறது. இதன்படி OECD […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் இடியுடன் கூடிய மழை : விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

இங்கிலாந்தின் சில பகுதிகளில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்ததை அடுத்து வானிலை ஆய்வு மையம் புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. புயல்கள் தொடர்வதால், மிட்லாண்ட்ஸ், இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் வேல்ஸின் சில பகுதிகளிலும், அண்டை பகுதிகளின் சில பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். பலத்த மழை மற்றும் “அடிக்கடி” மின்னல் தாக்குதல்கள் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், சில பயணத் தடை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் வியாழன் […]

error: Content is protected !!