இலங்கை பாடசாலை கல்விக் கட்டமைப்புக்களில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கை பாடசாலை கல்வி கட்டமைப்பிலும் உயர் கல்வித் துறையிலும் நெகிழ்ச்சித்தன்மையை வளர்ப்பதற்கான திட்டம் கொண்டு வரப்படவுள்ளதென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இத்திட்டம் முறையாக செயற்படுத்தப் பட்டால்,மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் எளிதாக அமைவதுடன், ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளும் இலகுவாக அமையுமென களனி நாகாநந்தா பௌத்த கற்கை நிறுவக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். இங்கு உரையாற்றிய அமைச்சர்: தற்போது, உலகின் முன்னணி […]













