உலகம்

மலேசியாவில் திடீர் சுற்றி வளைப்பு : இலங்கையர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

  • March 17, 2024
  • 0 Comments

மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 158 பேர்  மலேசியாவில் தங்குவதற்கு உரிய விசா இன்றி தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 83 ஆண்கள், 54 பெண்கள், 08 சிறுவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாக அதிகாரிகள் […]

இந்தியா

காதல் விவகாரம்; +1 மாணவியை பெற்றோரே படுகொலை செய்த கொடூரம்!

  • March 17, 2024
  • 0 Comments

ஓசூர் அருகே காதலித்த குற்றத்திற்காக பதினொன்றாம் வகுப்பு மாணவியை அவரது பெற்றோர்கள் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் ஸ்பூர்த்தி (16), பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 14ம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் […]

இலங்கை

உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி!

  • March 17, 2024
  • 0 Comments

உக்ரைன் இராணுவத்தில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வந்து இன்று வர்த்தக, ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்ததன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய தம்பதியினர் கடவத்தை பிரதேசத்தில் வசித்து வருவதுடன், அவர் தொழில் ரீதியாக பொருளாதார ஆசிரியர் […]

இலங்கை

நீராட சென்ற இடத்தில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி!

  • March 17, 2024
  • 0 Comments

காலி யக்கலமுல்ல பிரதேசத்தில் பொல்வத்த ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இரு சிறுவர்களும் உறவினர்கள் என்பதுடன், அவர்கள் தமது பெற்றோர்களுடன் ஆற்றில் நீராட வந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். நீரில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவர்கள், இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வட அமெரிக்கா

கனடிய பல்கலைக்கழகத்தில் மாணவிகள் குளிப்பதை படம் பிடித்த மாணவர்- கைது செய்த பொலிஸார்

  • March 17, 2024
  • 0 Comments

டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அனைத்து பெண் மாணவர்களும் பயன்படுத்தும் கழிவறையில் ஷவர் திரைகளுக்கு மேல் செல்போன் வைத்திருந்ததாக பொலிஸார் கூறியதை அடுத்து 19 வயது சர்வதேச மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவரி மற்றும் மார்ச் மாதத்திற்கு இடையில் ஸ்பேடினா அவென்யூ மற்றும் வில்காக்ஸ் ஸ்ட்ரீட் பகுதியில், குறிப்பாக யு ஆஃப் டி வில்சன் ஹால் இல்லத்தில் பல அறிக்கைகள் இருப்பதாக டொராண்டோ பொலிஸார் உறுதிப்படுத்தினர். மார்ச் 12 அன்று, பெண் மாணவர்கள் தங்கள் குடியிருப்பில் உள்ள பெண்கள் […]

இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் வெப்பநிலை : வடக்கு, கிழக்கு பதிவாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

  • March 17, 2024
  • 0 Comments

வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, தீவின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (18.03) கவனத்திற்குரிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும். இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய அளவில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, போதியளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பது, வெளியில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் […]

உலகம்

கனடா – ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரின் இறுதி அஞ்சலி நிகழ்வு!

  • March 17, 2024
  • 0 Comments

கனடா – ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் இறுதி அஞ்சலி இன்று (17.03) நடைபெற்றது. ஒட்டாவா நகரின் முடிவிலி மாநாடு மையத்தில் பல மதத்தினரின் பங்குபற்றுதலுடன் குறித்த இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. ஒட்டாவாவின் தெற்குப் பகுதியான பார்ஹேவன் புறநகரில் உள்ள டவுன்ஹவுஸில் நான்கு குழந்தைகள் உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். குழந்தைகளின் தந்தையான  தனுஷ்க விக்கிரமசிங்க கைகளிலும் முகத்திலும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டி-சொய்சா என்ற  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

26 வயசுலயே தளபதிக்கு ஜோடி போட்ட இந்திய அழகி… வைரலாகும் ஹாட் போட்டோஸ்

  • March 17, 2024
  • 0 Comments

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹிட் படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை மீனாட்சி சவுத்ரி. தற்போது இவர் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றார். தனது 26வது வயதிலேயே விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மீனாட்சி சவுத்ரியின் பூர்வீகம் ஹரியானா. தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 2023 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடித்துள்ள ‘கொலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் […]

ஐரோப்பா

எகிப்துக்கு 08 பில்லியனை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

  • March 17, 2024
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம் எகிப்துக்கு 08 பில்லியன் டொலர் உதவிப் பொதியை அறிவித்துள்ளது. பொருளாதார அழுத்தம் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள மோதல்கள் ஐரோப்பியக் கரைகளுக்கு அதிக குடியேறுபவர்களை விரட்டக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரியா, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் தலைவர்களின் வருகையின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர். எகிப்தின் ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிஸ்ஸி, வோன் […]

இலங்கை

இரு வெவ்வேறு பிரதேசங்களில் யானை தாக்கி இருவர் மரணம்!

  • March 17, 2024
  • 0 Comments

ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவு ஈரளக்குளத்தில் சனிக்கிழமை(16) இரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலி வெட்டையில் ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை யானை தாக்கி இருவர் மரணமடைந்துள்ளனர். இரு வெவ்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைபெற்ற மரணத்திற்கான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரிகளான எம்.எஸ்.எம்.நஸீர், கே. பவளகேசன் ஆகியோர் கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று மேற்கொண்டுள்ளனர் . ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு […]

error: Content is protected !!