விரைவில் இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கப்படும்
இலங்கைக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தடை அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என இலங்கை விளையாட்டு அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். வத்தளை பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விளையாட்டு நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நவம்பர் 2023 இல் இலங்கை கிரிக்கெட் ஐ.சி.சி.யால் தடை செய்யப்பட்டது. இம்மாத முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டைஸ் உள்ளிட்ட ஐசிசி அதிகாரிகளுடன் அண்மையில் […]













