வெளிநாட்டு வேலை மோகம்!! 3000 பேரை ஏமாற்றிய நபர்
தென்கொரியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி அனுமதியின்றி பணம் வசூலித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பேராதனை பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை சுற்றிவளைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சோதனையின் போது, தென் கொரிய வேலை நேர்காணலுக்காக ஏராளமான மக்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்திருந்தனர், மேலும் மோசடியை நடத்திய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். […]













