இலங்கை

13வது திருத்தம்- ஏமாற்றமே தொடரப்போகின்றது? ந.ஶ்ரீகாந்தா

ஏமாற்றமே தொடரப்போகின்றது என்றால், 13வது திருத்தத்தை முற்றுமுழுதாக மறந்துவிட்டு, சாத்தியமான வேறு வழிமுறைகளை அரசியல் ரீதியாக எமது மக்கள் நாட வேண்டி இருக்கும் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் மேலும் குய்ப்ப்பிடப்பட்டதாவது, ”13வது திருத்தச் சட்டத்தின் கீழான பொலீஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது பற்றி அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்தியே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார்.

பொலீஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்க்கும் சகல தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கும், அவர்களுடைய நோக்கம் நிறைவேறுவதற்கான நல்லதோர் சந்தர்ப்பத்தை இந்த பேச்சுவார்த்தைகள் வழங்கப்போகின்றன.

பேச்சுவார்த்தைகளில் எழப்போகும் எதிர்ப்புக்களை காரணம் காட்டி, இந்த விடயம் கைவிடப்படலாம் அல்லது கணிசமான காலத்திற்கு ஒத்திவைக்கப்படலாம். இல்லையேல், பொலீஸ் அதிகாரங்களை வெட்டிக் குறைத்து, வலுவற்றதாக்கி, வெறும் கண்துடைப்பாக ஒரு சில அதிகாரங்களோடு மாத்திரம், மாகாண பொலீஸ் படையினை நிறுவுவதற்கு சிங்கள கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை எட்டப்படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

தமிழ் மக்களை பொறுத்தமட்டில், 13வது திருத்தத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களில் எத்தவொரு மீளாய்வுக்கோ அல்லது சமரசத்துக்கோ இடமில்லை. மட்டுப்படுத்தப்பட்ட முறையில் அமைந்திருக்கும் இந்த அதிகாரங்களில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்க முடியாது.

சிங்கள அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஆட்சேபணைகளின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் பிடிவாதம் காட்டினால் மாகாணங்களுக்கான பொலீஸ் அதிகாரங்கள் அர்த்தம் அற்றுப் போய்விடும்.

குறுகிய காலத்திற்குள் 13வது திருத்தத்தின் பிரகாரம் காணி, பொலீஸ் அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் இருப்போடும், பாதுகாப்போடும் சம்பந்தப்பட்ட இந்த விடயங்களில் இனிமேலும் ஏமாற்றப்பட தமிழ் மக்கள் தயாரில்லை.

ஏமாற்றமே தொடரப்போகின்றது என்றால், 13வது திருத்தத்தை முற்றுமுழுதாக மறந்துவிட்டு, சாத்தியமான வேறு வழிமுறைகளை அரசியல் ரீதியாக எமது மக்கள் நாட வேண்டி இருக்கும் – என்றுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content