செய்தி வட அமெரிக்கா

மூடப்பட்ட கனடா அமெரிக்க எல்லை ; புகலிடக்கோரிக்கையாளர்கள் செய்யும் விடயம்

சமீபத்தில் கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road மூடப்பட்டது.

கனடாவும் அமெரிக்காவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது.

இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என அப்போதே புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.இந்நிலையில், Roxham Road மூடப்பட்டதால், வேறொரு பகுதி வழியாக மக்கள் கனடாவுக்குள் நுழைவது தெரியவந்துள்ளதாக புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்பு ஒன்றைச் சேர்ந்த Franz André என்பவர் தெரிவித்துள்ளார்.

கனடா அமெரிக்க எல்லையின் இரண்டு பக்கங்களிலிருந்தும் தனக்கு தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவித்துள்ள Franz André, சிலர் தன்னிடம் தாங்கள் இப்போது கனடாவுக்குள் இருப்பதாக தெரிவித்ததாக தெரிவிக்கிறார்.அதாவது, வேறொரு இடம் வழியாக வனப்பகுதிகளுக்குள் நுழைந்துள்ளார்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள்.

Canada-U.S.

வாட்ஸ் ஆப் வழியாக வேகமாக செய்தி பரவுவதாக தெரிவிக்கும் அவர், தாங்கள் எப்படி கனடாவுக்குள் வனப்பகுதி வழியாக நுழைந்தோம் என அவர்கள் மற்றவர்களுக்குக் கூற, அதைப் பின்பற்றி மற்றவர்கள் அதே வழியாக நுழையக்கூடும் என்கிறார்.இதில் பல பிரச்சினைகள் உள்ளன. ஒன்று கடும் குளிர் உள்ள வனப்பகுதியில் மக்கள் வழிதப்பிப்போய்விடலாம். அவர்கள் கடத்தல்காரர்களிடம் சிக்கவும் வாய்ப்புள்ளது.

எல்லாம்போக, தற்போது கனடாவும் அமெரிக்காவும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, கனடாவுக்குள் நுழைந்தவர்கள் கனடாவில் புகலிடம் கோரவும் முடியாது. ஆகவே, கனடாவுக்குள் நுழைபவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.அப்படி திருப்பி அனுப்பப்பட்ட சிலர், கையில் போதுமான பணமும் இல்லாமல் ஆங்காங்கு அலைந்து திரிவதாக குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

(Visited 2 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content