ஐரோப்பா

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்குத் தடை விதிக்க ஸ்டாமர் அழைப்பு!

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்குத் தடை விதிக்க பிரித்தானிய பிரதமர் செர் கெய்ர் ஸ்டாமர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்சில் காணப்படுவது போல, பேரணிகளைத் தடுப்பது யூத-எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மீண்டும் நடைபெறும் பேரணிகள் யூத சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறிப்பிட்ட அவர், யூத-எதிர்ப்பைச் சமாளிக்க ‘சமூகம் தழுவிய பதில் நடவடிக்கை’ தேவை என்றும் வலியுறுத்தினார்.

கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் ‘கடுமையானதாக உயர்த்தப்பட்டது.

இந்த நடவடிக்கையானது அடுத்த 06 மாதங்களில் தாக்குதல் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது  என்பதை வெளிப்படுத்துகிறது.

அதேநேரம் இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி பயங்கரவாதம் ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளதாக MI5 அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே ஸ்டாமரின் மேற்படி கருத்துக்கள் வந்துள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!