செய்தி வட அமெரிக்கா

நிர்வாண கொலத்தில் சாலையில் நடந்து சென்ற பிரபல நடிகை: விசாரணையில் தெரவியவந்த உண்மை

அமெரிக்காவில் பிரபல நடிகை ஒருவர் உடலில் ஆடையின்றி சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பிரபல நடிகையான அமண்டா பைனஸீக்கு 36 வயதாகிறது. இவர் 1990, 2000ம் காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஹாலிவுட் படங்களான ஈஸி ஏ, ஷீ இஸ் தி மேன், வாட் ஏ கேர்ள் வான்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து நிறைய ரசிகர் மனதைக் கொள்ளை கொண்டவர்.அமண்டா பைனீஸ் நல்ல நடிகையாக அறியப்பட்டிருந்தாலும் அவர் ஒரு சில காரணங்களால் மேலும் தொடர்ந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் அமண்டா பைனஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார். அவர் திடீரென லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் சாலைகளில் உடலில் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக தெருவில் நடந்து சென்றுள்ளார்.இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி அதன் ஓட்டுநர்களிடம் பேசியுள்ளார்.

Amanda

அப்போது ஓட்டுநர் ஒருவரிடம் தான் மனநல காப்பகத்திலிருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். பொலிஸார் விரைந்து சென்று அமண்டா பைனஸை மீட்டனர்.இதையடுத்து மனநல நிபுணர் அவரை பரிசோதித்துப் பார்த்துள்ளனர். அப்போது அவர் ‛பைபோலார் டிஸ்சார்டர் எனும் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் அவரை மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு 3 நாள் சிகிச்சை தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது.ஒருவேளை அவர் பாதிப்பிலிருந்து மீளாவிட்டால் கூடுதல் காலம் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் தற்போது அவரை காப்பகத்தில் வைத்து மனநல பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கு முன்பு அமண்டா மனநல சிகிச்சையிலிருந்ததாகவும், சமீபத்தில் அவர் சிகிச்சையை கைவிட்ட நிலையில் பிரச்சனையை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content