இலங்கை செய்தி

சேற்றிலே புதைக்கப்பட்ட இளம்பெண் – இராணுவச் சிப்பாய் கைது

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயலில் 25 வயதுடைய திருமணமான பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு, அந்த பகுதியில் நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு கணவர் வீடு திரும்பியபோது, ​​மனைவி வீட்டில் இல்லாததால், அக்கம் பக்கத்தினர், மனைவியை தேடினர்.

அப்போது, ​​நேற்று காலை, வீட்டின் பக்கத்து வயல்வெளி சேற்றில், குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் உத்தியோகபூர்வ பொலிஸ் நாய்கள் களமிறக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. விசாரணைகளின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரான இராணுவ சிப்பாய், குறித்த பெண்ணிடம் பல சந்தர்ப்பங்களில் தகாத யோசனைகளை முன்வைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content