இலங்கை செய்தி

சட்டவிரோத பயணம் தொடர்பில் அவுஸ்ரேலிய தூவர் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட இல்லை என தெரிவித்துள்ள அவர்,  ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்கடத்தல் என்பது புதிய விடயமல்ல பல வருடங்களாக காணப்படுகின்றது இலங்கை இந்த விடயத்தை கையாளும் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு எவராவது விரும்பினால்அதற்கான சிறிதளவு வாய்ப்பும் இல்லை என்பதை தெரிவிப்பதற்கான தீவிரபிரச்சாரம் இலங்கையில் இடம்பெறுகின்றது எனவும்  எந்த படகும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை சென்றடையவில்லை சட்டவிரோத குடியேற்றவாசிகள் எவரும் அவுஸ்திரேலியாவை சென்றடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content