செய்தி தமிழ்நாடு

கூர்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம்

மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டு உள்ள அறையையும், மகளிர் காவல்நிலையத்தையும் டெல்லியை சேர்ந்த தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், ஆர்.ஜி.ஆனந்த் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து குழந்தைகள் போக்சோ வழக்குகள், மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்து காவல்நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து
பேசுகையில்,

மதுரையில் கூர்நோக்கு இல்லங்களில் எந்தப்பிரச்சனையும் இல்லை.

தமிழகத்தில் தொடர்ந்து கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறார்கள் தப்பித்து செல்கின்றனர்.

கூர்நோக்கு இல்லங்கள் நல்வழிப்படுத்த தான் உள்ளன. பாதிக்கப்படும் இடங்களாக கூர்நோக்கு இல்லங்கள் இருக்கக்கூடாது. கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறார்கள் தப்பிக்க உளவியலே காரணமாக உள்ளது. சிறார்களை பார்க்க ஜாமீனில் எடுக்க பெற்றோர்களோ உறவினர்களோ வராததால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

அதனால் கூர்நோக்கு இல்லங்களில் அரசு உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதற்கான பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

5 மாநிலங்களில் 21 கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு செய்துள்ளேன். அதனால் உளவியல் ஆலோசனைகளை வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக 51 இடங்களில் தேர்ந்தெடுத்து குழந்தைகள் யாசகம் பெறுவது, குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவில்கள் மற்றும் மசூதிகளில் குழந்தை யாசகர்களை கண்டறிந்து மீட்க இணைஆணையர் மற்றும் துணை ஆணையர், கோட்டாச்சியர், வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படு..

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இதுபோன்று குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவில்களில் வாரம் ஒருமுறை கண்காணித்து கோவிலில் குழந்தைகள் யாசகம் பெறுவது கண்காணிக்கப்பட்டு குழந்தைகள் மீட்கப்படுவர். அவர்கள் காப்பகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளே நேரடியாக குறைகளை கொடுத்து குறைகளை நிவர்த்தி செய்யும் திட்டம் உள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்ளும் சட்டம் மற்றும் முடிவுகள் குறித்து டிஜிபி மற்றும் முதல்வருக்கு ஆலோசனை கொடுப்போம்.

டெல்லியில் இருந்து கோப்புகளை கையெழுத்திடுவது சரியாக இருக்காது என்பதால் நேரடியாக ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்குகிறோம்.

தமிழகத்தில் கூர்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசுக்கு இதை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறோம் என பேசினார்.

(Visited 1 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content