செய்தி வட அமெரிக்கா

கனடாவில் காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருடிக்கடி !

கனடாவில் காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

சுகாதார காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக ஒன்றாரியோ மாகாணம் அறிவித்துள்ளது.

இந்த மாத 31ம் திகதியுடன் சுகாதார காப்புறுதி செய்யாத பிரஜைகளுக்கான சுகாதார வசதி திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளது.எனினும் இந்த நடவடிக்கையானது வசதி குறைந்த மக்களுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூகத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தக் கூடும் என மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.கோவிட் வைரஸ் தொற்று பரவிய காலத்தில் சுகாதார காப்புறுதி செய்து கொள்ளாதவர்களின் நலன் கருதி அனைவருக்கும் மருத்துவ நலன்களை வழங்க மாகாண அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் சுகாதார காப்புறுதி செய்து கொள்ளாதவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைக்கு கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளது.

(Visited 2 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content