இலங்கை செய்தி

கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம் குறித்து கடற்படை விளக்கம்!

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தைத் தவிர வேறு எந்த மத வழிப்பாட்டுதலமும்  இல்லை என்றும் எதிர்காலத்தில் எந்தவொரு விகாரையும் நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கடற்படை ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  கச்சதீவு நிலப்பரப்பில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும். அப்பகுதியின் பாதுகாப்புக்காக கடற்படைக் குழுவொன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக இலங்கை கடற்படை  புனித அந்தோனியார் தேவாலயத்தையும்  பாதுகாத்து வருகின்றனர்.

புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா வைத் தவிர  இந்த தேவாலயம் தினமும் சுத்தம் செய்யப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு கடற்படையினரால் பராமரிக்கப்படுகிறது.

இந்த கடற்படை இணைப்பில் பணிபுரியும் கடற்படையினர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால் அவர்களின் மத வழிபாட்டு  நடவடிக்கைகளுக்காக ஒரு சிறிய புத்தர் சிலை கடற்படை இணைப்பின் கடற்படையினரின் இல்லத்திற்கு அருகில் வைக்கப்பட்டு மத வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் இந்த தேவாலயத்தை தவிர இந்த தீவில் வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் மேற்கொள்ள முடியாது. இதேவேளைஇ  கடமைகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவ இல்லங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர இந்த கச்சதீவில் வேறு எந்த மத வழிப்பாட்டுதலமும் இல்லை என்றும் எதிர்காலத்தில் எந்தவொரு விகாரையும் நிர்மாணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை  என்றும் கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content