இலங்கை செய்தி

இலங்கை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 60 சதவீதத்துக்கு மேல் பாடசாலைக்கு மாணவர்கள் வர முடியாத காரணத்தால் இந்த வருடத்தில் அதிக விடுமுறை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் முதலாம் தவணை பொதுவாக ஜனவரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கொரோனா காரணமாக தாமதமான கால அட்டவணையை தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்தி முடித்ததாகத் தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பெரும்பாலான பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content