இந்தியா செய்தி

இன்றைய பகல் நேர போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

அபாரமாக ஆடிய யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் தலா 54 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன.

துவக்க வீரர் அபிஷேக் சர்மா, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

அதன்பின்னர் மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக் ஜோடி சற்று நேரம் தாக்குப்பிடித்தது. இந்த ஜோடியை சாகல் பிரித்தார். ஹாரி ப்ரூக் 13 ரன்னில் வெளியேறினார்.

52 ரன்கள் எடுப்பதற்குள் 6 முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அணி தோல்வியை நோக்கி பயணித்தது.

இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

யுஸ்வேந்திர சாகல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட், ஹோல்டர், அஷ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content