இலங்கை செய்தி

அரச நிறுவனங்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

அனைத்து அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை விரைவாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பெரும்பாலானஅமைச்சின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கிணங்க அனைத்து அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை விரைவாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள்,மாகாண சபைகள் அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பெரும்பாலான அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு வழங்கத் தவறிவிட்டன என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனையடுத்தே பிரதமர் மேற்படி பணிப்புரையை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு அரச நிறுவனங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு தாமதம் இன்றி பெற்றுக் கொடுக்க வேண்டியது அந்த நிறுவனத் தலைவர்களினும் அமைச்சின் செயலாளர்களினதும் பொறுப்பாகும் என்றும் பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content