இலங்கை செய்தி

அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல்?

னாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என தான் கருதுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான எதிர்பார்ப்புகள் வலுத்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலே சிறந்த தீர்வு என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் அடிப்படையில் தனது முதலாவது பதவிக்காலத்தின் நான்குவருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியால் புதிய மக்கள் ஆணையை பெறுவதற்காக ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்புவிடுக்க முடியும்.

இதன் காரணமாக ஜனாதிபதியின்  நான்குவருட பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலிற்கான அழைப்பு விடுக்கப்படலாம் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன.

எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் அவரின் முடிவடையாத பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கே தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த பின்னர் அவரின் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்றவர்  இராஜினாமா செய்த ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக்காலத்தையே பூர்த்தி செய்யவேண்டும் அவரால் இடைக்கால தேர்தலிற்கு செல்ல முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content