பெண்ணுக்கு நடந்த கொடுமை : மின்கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்திய முச்சக்கரவண்டி சாரதிகள்!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/1678436160904-jpg.webp)
கேலி-கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவனை இழந்த 35 வயதுடைய பெண் ஒருவர் தனது தாயாருடன் கன்னியாகுமரியில் அருமனை என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார்.இவர் அந்த பகுதியில் செல்லும் பொழுது எல்லாம் முச்சக்கர சாரதிகள் அவரை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இவ்வாறு வழக்கமாகவே இருந்த சமயத்தில் கோபமடைந்த அந்த பெண் நேற்று மதியம் வீட்டுக்கு சென்று கம்பு மற்றும் வெட்டுக்கத்தியை எடுத்து வந்து அவர்களை தாக்க முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முச்சக்கர சாரதிகள் அந்த பெண்ணை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தகாத வார்த்தையில் பேசி அவரை துன்புறுத்தியுள்ளனர். இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து வீடியோ எடுத்து பொலிஸாருக்கு அனுப்பியுள்ளனர்.