இலங்கை செய்தி

பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு பேராயர் வலியுறுத்தல்!

பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்து அந்த சட்ட மூலத்தை தோற்கடிக்கச் செய்ய வேண்டியது பொறுப்புவாய்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பாரிய பொறுப்பாகும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

கொழும்பு ஆயர் இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து  நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான நாடொன்றை கையளிக்க வேண்டியது நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரினதும் தார்மீக பொறுப்பாகும்.

இதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பேராபத்தை விளைவிக்கக்கூடிய இந்த சட்ட மூலத்திற்கு எதிராக செயற்பட வேண்டியது அவசியம் என அவர்  வலியுறுத்தினார்.

இந்தப் பின்னணியில்தான் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியன்று  பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் 2023 எனும் சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டிருந்தது.  பயங்காரவாத தடுப்பு சட்டத்திற்கான ஏற்ற சரியான வரைவிலக்கணத்தின்படி இந்த சட்ட மூலம் அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content