இலங்கை மக்களின் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/595-jpg.webp)
இலங்கையில் 86 சதவீத மக்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் பொருட்களின் அளவைக் குறைத்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
2022ஆம் ஆண்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அண்மையில் பல ஆய்வுகளின் அறிக்கைகளை வெளியிட்டு இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் மேலும் 75 சதவீத மக்களுக்கு உணவு தயாரிக்கும் உணவுப் பொருட்களின் பயன்பாடும் குறைந்துள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
45 சதவீதம் பேர் உணவு உண்ணும் நேரத்தை குறைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 38 சதவீதம் பேர் உணவின் அளவை குறைத்துள்ளதாக இது தொடர்பான ஆய்வு அறிக்கை கூறுகிறது.
நாளாந்த வருமானத்தை உணவுக்காக செலவிடும் போது, 68 வீதமான தோட்டத் துறையினர் தாம் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை உணவுக்காகவே செலவிட்டுள்ளனர்.
இரத்தினபுரி, அம்பாறை, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 75 வீதமான மக்கள் தாம் சம்பாதித்த பணம் முழுவதையும் உணவுப் பொருட்களுக்கு செலவழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் 2 மில்லியன் மற்றும் 2.6 மில்லியன் மக்கள் கூடுதல் உணவை உட்கொள்வதை நிறுத்தியுள்ளனர்.