இலங்கையில் மசாஜ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த கதி

கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது.
கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் இன்று காலை அந்த நபர் அங்கு உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
(Visited 13 times, 1 visits today)