செய்தி வட அமெரிக்கா

அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: பொலிஸாரின் அதிரடி!

ஸ்கார்பரோ மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு மற்றும் கிங்ஸ்டன் சாலை அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரொறன்ரோ பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் பெண் ஒருவரை மீட்டுள்ளதாகவும், ஆனால் முதலுதவி அளிக்கும் போதே அவர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைதாகியுள்ளதாகவும், ஆனால் பெயர் உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகள் தரப்பு வெளியிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் கொலை வழக்கை விசாரிக்கும் பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content