வெளிநாடொன்றில் இலங்கையர்கள் இருவர் பலி
 
																																		மத்திய கிழக்கு நாடான டுபாயில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த இருவர் திடீர் சுகயீனம் அடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிவெல்கெலேயைச் சேர்ந்த 28 வயதான சந்துன் மதுசங்க மற்றும் அண்டன்வில்வத்தையைச் சேர்ந்த ரமேஷ் உதார திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உடல்நிலை மோசமடைந்ததையடுத்து உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்ததாக பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
