ஐரோப்பா

உக்ரேன் மீது ரஷ்ய வான்வழித் தாக்குதலில் இருவர் மரணம்

உக்ரேனின் சுமி பகுதியில் இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும் நால்வர் காயமுற்றதாகவும் வடகிழக்கு உக்ரேனின் ராணுவ நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) தெரிவித்தது.

காயமுற்றவர்களில் இருவர் சிறுவர்கள் என டெலிகிராம் செயலியில் அது கூறியது. பல்வேறு குடியிருப்புகளும் கார்களும் சேதமுற்றதாகவும் அது சொன்னது.

இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்யாவிடமிருந்து கருத்து வெளிவரவில்லை.

ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள சுமி, ரஷ்யப் படைகளால் அடிக்கடி தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. குடிமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுவதை ரஷ்யா மறுத்துள்ளது. மாறாக, உக்ரேனின் போர் முயற்சிகளுக்கு முக்கியமான உள்கட்டமைப்புகளை அழிப்பதையே தனது தாக்குதல்கள் இலக்கு கொண்டிருப்பதாக ரஷ்யா கூறி வருகிறது.

2022 பிப்ரவரியில் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான குடிமக்கள் போரில் இறந்துவிட்டனர். மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!