ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

சீனாவில் அச்சுறுத்தும் வைரஸ் – அச்சத்தில் உலக நாடுகள் – அமைதி காக்கும் WHO

சமூக ஊடகங்கள் மூலம் சீனா முழுவதும் மீண்டும் கடுமையான வைரஸ் பரவி வரும் போதிலும், உலக சுகாதார அமைப்போ, சீன அரசோ இதுவரை அப்படியொரு நிலை இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நாட்களில், மனித மெட்டாப்நிமோனியா அல்லது HMPV எனப்படும் வைரஸ் சீனா முழுவதும் பரவி வருவதாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றது.

கோவிட் 19 வைரஸ் தாக்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் மீண்டும் வைரஸ் பரவி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் உள்ள மருத்துவமனைகள் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் நிரம்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்திகளில் உண்மை இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குளிர்காலம் தொடங்கும் பட்சத்தில் சுவாசக் கோளாறுகள் தீவிரமடைவது வழக்கமாகும். எனினும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இத்தகைய சுவாசக் கோளாறுகளின் தாக்கம் குறைந்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.

சீன சுற்றுலாப் பயணிகள் மீது தேவையற்ற அச்சம் இருக்கக் கூடாது என்பதை உலகுக்கு வலியுறுத்துகின்றனர். சீன வெளியுறவு அமைச்சகம் தனது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் வலியுறுத்துகிறது.

இதேவேளை, சீனாவில் உள்ள இலங்கையர்களும், இவ்வாறானதொரு அவல நிலை குறித்து தாங்கள் எதுவும் கேட்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். சீனாவில் உள்ள இலங்கையர்களும் தமக்கு சுகாதார பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.

சில நிபுணர்கள் கூட, சீனாவில் இந்த சுவாசக் கஷ்டம் குளிர்காலத்தில் பொதுவானது என்றும், இது ஒரு புதிய வைரஸ் அல்லது தொற்றுநோய் அச்சுறுத்தல் அல்ல என்றும் கூறுகிறார்கள்.

இருப்பினும், இந்த HMPV வைரஸ் நிலை ஒரு வாரத்தில் மறைந்துவிடும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி