விளையாட்டு

அடுத்த போட்டியில் களமிறங்கும் மும்பை அணியின் நட்சத்திர வீரர்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து 17 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது.

புள்ளி பட்டியலில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த 3 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை.அவர் காயம் காரணமாக என்சிஏ-வில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். முதல் கட்ட சோதனை அவர் உடல் தகுதியுடன் இல்லை என என்சிஏ அறிவித்தது. இதனால் அவர் முதல் 3 போட்டிகளில் விளையாடவில்லை.

இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் உடல் தகுதியுடன் உள்ளார் என என்சிஏ தெரிவித்தது. இந்நிலையில் சூர்யகுமார் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று இணைந்துள்ளார்.

வரும் 7-ந் தேதி டெல்லி அணியுடனான போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content