Site icon Tamil News

தொப்புள் கொடியுடன் கழிவுநீர் தொட்டி மீது குழந்தையை வீசி சென்ற தாய்…!

இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் தொட்டி மீது குழந்தையை வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தின் பின் புறத்தில் பிறந்த ஒரு சில மணிநேரமே ஆன ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் கழிவு நீர் தொட்டியின் மீது வீசி சென்றுள்ளனர்.

அங்கு பணி புரியும் ஊழியர் ஒருவர் இதை பார்த்து, வைத்தியரிடம் தெரிவித்த பின்னரே குழந்தையை மீட்டெடுத்து குளிரூட்டும் அறையில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இச்சம்பவம் அறிந்த பொலிஸார் மருத்தவமனைக்கு விரைந்து விசாரணை நடத்தியுள்ளனர்.மேலும் இந்த குழந்தையானது அந்த வைத்தியசாலையில் பிறக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வேறொரு மருத்துவமனையில் குழந்தை பிறந்து இங்கு வந்து வீசி சென்றனரா? அல்லது தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என பலக் கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சியை எற்படுத்தி இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version