இந்தியா தமிழ்நாடு

தமிழகத்தில் பிரச்சாரப்போர் நாளையுடன் ஓய்வு!

  • April 20, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார போர் நாளை (21) மாலை 6 மணியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் இறுதி கட்ட சூறாவளிப் பிரசாரத்தில் தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் 15 ஆம் திகதி வெளியானது. இதற்கமைய ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். இத்தேர்தலில் தமிழகத்தில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் 1977-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற […]

செய்தி

குஜராத், மும்பை அணிகள் இன்று மோதல்!

  • April 20, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 30 ஆவது லீக் ஆட்டத்தில் Gujarat Titans, Mumbai Indians ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவிய குஜராத் அணி, டெல்லிக்கு எதிரான ‘திரில்’ வெற்றிக்குப் பிறகு அசுர பலம் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளைத் துவம்சம் செய்த குஜராத் அணி, தற்போது ஹாட்ரிக் வெற்றிகளுடன் உத்வேகத்தில் உள்ளது. மறுபுறம், 5 முறை […]

உலகம் செய்தி

ஈரான்மீதான போரால் சரியும் ட்ரம்பின் செல்வாக்கு!

  • April 20, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இழந்துவருகின்றார். NBC நடத்திய கருத்து கணிப்பில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. ஈரான்மீதானபோரை டிரம்ப் கையாண்ட விதம் காரணமாக அவரது ஆதரவு மதிப்பீடு 37 சதவீதமாகக் குறைந்துள்ளது. அமெரிக்கர்களில் பெரும்பான்மையானோர் அவரது செயல்பாடுகளை ஏற்கவில்லை என்பதுடன், நாட்டின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வலுவான எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ஈரானுக்கு எதிரான போரைத் தொடர்வதை மிகத் தீவிரமாக எதிர்க்கின்றனர். அதேவேளை, பெரும்பாலான […]

இலங்கை செய்தி

திருமலையில் சோகம்!விபத்தில் இளைஞன் பலி

  • April 20, 2026
  • 0 Comments

திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மாட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலியாகியுள்ளார். நேற்றிரவு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் திருகோணமலை நடேசன் கோயில் அடியில் வசித்து வரும் எஸ். நிரோஜன் (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த திருகோணமலை -கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த ஜீவராணி (47வயது) கை உடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து […]

விளையாட்டு

லக்னோவை பந்தாடியது பஞ்சாப் கிங்ஸ்!

  • April 20, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் 54 ஓட்டங்களால் Punjab Kings அணி வெற்றிபெற்றுள்ளது. முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Lucknow Super Giants அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கான்னொலி ஆகியோர் லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 […]

உலகம் செய்தி

ஈரான் கப்பலை சிறைபிடித்தது அமெரிக்கா!

  • April 20, 2026
  • 0 Comments

ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) அமெரிக்கக் கடற்படையால் வளைகுடாப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீற முயன்ற இந்தக் கப்பலின் இயந்திரப் அறையைச் சேதப்படுத்தி அமெரிக்கப் படைகள் அதைக் கைப்பற்றியுள்ளன. இந்தச் செயலை ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவம் என்று ஈரான் விமர்சித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காகத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் செல்லவிருந்த நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளது. ஈரான் மற்றும் […]

இலங்கை செய்தி

சீதையம்மனை வழிபட நுவரெலியா செல்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று (20) நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்திய உதவியுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார். மக்களையும் சந்திக்கவுள்ளார். நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலும் ஈடுபடவுள்ளார். இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி இன்று மாலை தாயகம் திரும்புவார்.

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் ‘Yellow Line’ கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியது இஸ்ரேல்!

  • April 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் ‘மஞ்சள் கோடு’ (Yellow Line) என்ற புதிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது. காசா பகுதியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிரிவினையைப் போலவே, இந்த எல்லைக்கோடு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான இடைவெளியைத் தீர்மானிக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தாலும், இந்த எல்லையைத் தாண்டி வரும் நபர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இராணுவம் எச்சரித்துள்ளது. அண்மையில் இந்த எல்லையை மீறியதாகக் கூறப்படும் ஆயுததாரிகள் […]

அரசியல் இலங்கை செய்தி

ஒற்றுமைக்கான முயற்சியை தகர்த்தது தமிழ்க் காங்கிரஸ்: தமிழரசுக் கட்சி விசனம்!

  • April 18, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி கடும் விசனம் வெளியிட்டுள்ளது. இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு ‘புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணக்கப்பாடு’ என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:- […]

இலங்கை செய்தி

“மன்னாரில் மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தம்”

  • April 18, 2026
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய முறைகேடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைகளுக்குப் பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம், மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (18) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் […]

error: Content is protected !!