இலங்கை செய்தி

சந்தேக நபர் கைது: போலி துப்பாக்கியே கொண்டுவந்தார் என்பது அம்பலம்!

  • February 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும் , குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் சந்தைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது குறித்த நபர் தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் வந்து, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு […]

இலங்கை செய்தி

யாழில் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தைக்குள் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- மருதனார்மடம் சந்தைக்கு வந்த நபர் ஒருவர், தனது அடையாளத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் மற்றும் கைகளுக்குக் கையுறைகளை அணிந்திருந்துள்ளார். அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் வழமை போல் பச்சை மிளகாயைக் கொள்வனவு செய்த அவர், திடீரென “இந்தச் சந்தைக்குள் வட்டிக்குப் […]

விளையாட்டு

நியூசிலாந்து அணி சாதனை வெற்றி!

  • February 10, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரக UAE அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடி வெற்றிநடை போட்டுள்ளது. T 20 உலகக்கிண்ண தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற UAE அணியின் தலைவர் முகமது வசீம் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி துடுப்பெடுத்தாடிய UAEஅணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 174 […]

இலங்கை செய்தி

யாழில் நடந்த துப்பாக்கிச்சூடு: அரசு கூறுவது என்ன?

  • February 10, 2026
  • 0 Comments

“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa இன்று (10) தெரிவித்தார். ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ்.குற்ற விசாரணைப் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன எனவும் அவர் கூறினார். யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், வேனொன்றை செலுத்திச் சென்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார். வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

பிக்குகளை விடுவிக்கக் கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்!

  • February 10, 2026
  • 0 Comments

திருகோணமலை, சங்கமித்தை விகாரைக்கு முன்பாக இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. திருகோணமலை ‘டச்பே’ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டுமானம் ஒன்றை அமைத்தமை மற்றும் அங்கு புத்தர் சிலையொன்றை நிறுவியமை தொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் திகதி மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் […]

இலங்கை செய்தி

குஜராத் முதல்வருடன் ஜே.வி.பி. செயலர் சந்திப்பு: கேரளா செல்லவும் ஏற்பாடு!

  • February 10, 2026
  • 0 Comments

ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva, இந்தியா குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர ரஜினிகாந்த் படேலுடன் Bhupendra Rajnikant Patel பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது என ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பிரகாரமே டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ளார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ் Kitnan Selvaraj , இளங்குரமன் Ilanguraman உள்ளிட்ட குழுவினரும் சென்றுள்ளனர். இவ்விஜயத்தின் ஓர் அங்கமாகவே குஜராத் […]

விளையாட்டு

நமீபியாவை பந்தாடியது நெதர்லாந்து!

  • February 10, 2026
  • 0 Comments

நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T – 20 உலகக் கிண்ண தொடரில் 10வது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் நெதர்லாந்து அணி 157 ஓட்டங்களை இலக்காக […]

இலங்கை செய்தி

மாணவர்களிடம் நிதி சேகரிக்க தடை: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!

  • February 10, 2026
  • 0 Comments

“பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளது. எனினும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் Vedhanayakan தெரிவித்தார். இத்தகைய முறைகேடான நிதி அறவீடுகளைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் எனவும் அவர் கூறினார். வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், […]

அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகர் பதவி விலக வேண்டியதில்லை: NPP திட்டவட்டம்!

  • February 10, 2026
  • 0 Comments

சபாநாயகர் பதவி விலகமாட்டார் என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க Nihal Abeysinghe தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் பதவி விலகவேண்டும் என எதிரணி வலியுறுத்தியுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர், இந்த விசாரணையை கருத்தில் கொண்டு பதவி விலக வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே தேசிய மக்கள் […]

இலங்கை செய்தி

கம்பி வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் சிறுத்தைப் புலியின் சடலம் இன்று (10) மீட்கப்பட்டுள்ளது. கம்பி வலையில் சிக்கியே சிறுத்தை உயிரிழந்துள்ளது என நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தைப்புலி (09) ஆம் திகதி இரவு கம்பி வலையில் சிக்கியதாகவும், தப்பிக்க முயன்ற போது அதன் கழுத்துப் பகுதி கம்பியில் இறுகப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலியொன்று உயிரிழந்துள்ளதாக தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகம் மூலமாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை பரிசோதித்த […]

error: Content is protected !!