இந்தியா செய்தி தமிழ்நாடு

தொகுதி பங்கீடு: பேச்சு நடத்த விசேட குழு அமைத்தது தி.மு.க.!

  • February 21, 2026
  • 0 Comments

தேர்தல் கூட்டணி அமைக்கும் நகர்வை வெற்றிகரமாக நகர்த்தி வரும் தி.மு.க., அடுத்தக்கட்டமாக தொகுதி பங்கீடு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த எழுவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவின் தலைமைப் பதவி டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துபை; பொதுச்செயலாளர் திருச்சி சிவா, ஆ.இராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ. வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏனைய குழு உறுப்பினர்களாவர்.

இலங்கை செய்தி

இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, அமெரிக்கா ஆராய்வு!

  • February 21, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் Stephen T. “Web” Koehler, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்து பேச்சு நடத்தினார். இச்சந்திப்பில், பகிரப்பட்ட பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த நிவாரண திறன்களை மேம்படுத்தல், ஒத்துழைப்பை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்துதல் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்பு பிரதி […]

அரசியல் இலங்கை செய்தி

டயஸ்போராக்களின் அழுத்தத்துக்கு அடிபணிவாரா நாமல்?

  • February 21, 2026
  • 0 Comments

“டயஸ்போராக்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றனர் என்பதற்காக சும்மா இருந்துவிடப்போவதில்லை. கட்டாயம் லண்டன் செல்லுமாறு நாமலிடம் கூறியுள்ளோம். பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவர் முடிவை எடுப்பார்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில், நாடாளுமன்ற உறுப்பிர் நாமல் ராஜபக்ச நிகழ்த்த விருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு நேற்று பதிலளித்த தஸ்ஸ குட்டியாராச்சி கூறியவை வருமாறு, “நாமல் […]

அரசியல் இலங்கை செய்தி

போரை காட்டிக்கொடுத்தாரா மஹிந்த?

  • February 21, 2026
  • 0 Comments

“மஹிந்த ராஜபக்ச போரை காட்டிக்கொடுத்துவிட்டார் என Sarath Fonseka பொன்சேகா கூறுவது அபத்தமானது. போரை முடிப்பதற்கு மஹிந்த ராஜபக்சவே சிறப்பான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ராஜபக்ச குடும்பம் தொடர்பில் பொன்சேகா கடும் வைராக்கியத்துடனேயே இருக்கின்றார். மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பொன்சேகா கதைப்பதில்லை. மாறாக ராஜபக்சக்கள் பற்றியே […]

விளையாட்டு

சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

  • February 21, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண தொடரில் இன்று (21) ஆரம்பமாகும் சூப்பர் 8 சுற்றில் முதலாவது போட்டியில் நியூசிலாந்து New Zealand மற்றும் பாகிஸ்தான் Pakistan ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளும் சமபலம் படைத்த அணியென்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. தொடர்புடைய செய்தி……… சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பம்: போட்டிகள் தொடர்பான முழு விபரம்…!

அரசியல் இலங்கை செய்தி

அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த மாகாணசபைத் தேர்தலை நடத்துக!

  • February 21, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எம்.பி. தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்றிரவு நாடு திரும்பினார். இந்நிலையிலேயே இந்தியா சென்று அந்நாட்டு பிரதமர் மோடியை சந்தித்தால் மட்டும் போதாது, ஜனநாயகத்தை நிலைநாட்ட இங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். “ இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர […]

செய்தி

மனித உரிமை விவகாரம் குறித்து ஐ.நா. பிரதானியுடன் பிரதி அமைச்சர் பேச்சு!

  • February 21, 2026
  • 0 Comments

பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச கட்டமைப்பிற்குள் ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட இலங்கை தயாராக இருக்கின்றது என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா Arun Hemachandra தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிரான்சுடன் Marc-André France நடைபெற்ற சந்திப்பின்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக பின்வரும் […]

இலங்கை செய்தி

மூன்று வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து!

  • February 21, 2026
  • 0 Comments

கண்டி ​​Kandy மாவட்டம், கம்பளை Gampola பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல Nagolla பகுதியில் வைத்தே நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கம்பளை நோக்கிப் பயணித்த காரொன்று, பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் அவரது இரு படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் […]

இலங்கை செய்தி

” கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கட்டளைத் தளபதி”

  • February 20, 2026
  • 0 Comments

இலங்கைக்குபயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler) இன்று கொழும்பு துறைமுகத்துக்கு சென்றிருந்தார். கடல்சார் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு வருமாறு, ” அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான பாதுகாப்பு உறவானது பாதுகாப்பை மட்டுமன்றி வேறு பல விடயங்களையும் பலப்படுத்துகிறது. அது எமது இரு நாடுகளதும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. கடல்சார் […]

இந்தியா தமிழ்நாடு

மீண்டும் வெல்வோம்: தி.மு.க. ஆட்சி தொடரும் ! தமிழக முதல்வர் சூளுரை!

  • February 20, 2026
  • 0 Comments

“ சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து DMK ஆட்சி அமைப்போம். தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ இவ்வாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் M.K. Stalin சூளுரைத்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாகச் செய்தாகவே நான் நினைக்கிறேன். இந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் […]

error: Content is protected !!