அரசியல் இலங்கை செய்தி

சஜித்துக்கு ரணில் கொடுத்த “பிறந்தநாள் பரிசு” – தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்!

  • January 12, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு Sajith Premadasa , ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தொலைபேசி ஊடாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், சஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுக்கு தமது பிரதிநிதிகளையும் அவர் அனுப்பியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் 59 ஆவது பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு கங்காராம விகாரையில் விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஐதேக வலியுறுத்து!

  • January 9, 2026
  • 0 Comments

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள Thalatha Athukorala கூறியவை வருமாறு, “ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் நிச்சயம் இணைந்து செயல்படும். எனவே, முடிந்தால் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தட்டும். எமது கூட்டு பலம் என்னவென்பது தெரியவரும். ரணில் விக்கிரமசிங்க என்பவர் நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர். எனவே, தலைவர் தேர்வின்போது ரணில் […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், சஜித் இணைந்தால் வெற்றி நிச்சயம்: நவீன் நம்பிக்கை

  • January 8, 2026
  • 0 Comments

“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலில் இட ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம். முகாமைத்துவ குழவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். […]

அரசியல் இலங்கை செய்தி

ரணிலுக்காக எம்.பி. பதவியை துறப்பாரா ரவி?

  • January 6, 2026
  • 0 Comments

அரசியலில் இருந்து தான் ஓய்வுபெற்றுவிட்டதாக ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe கட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க Ravi Karunanayake தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ரணில் நாடாளுமன்றம் வருவதற்காக தேசிய பட்டியல் எம்.பி. பதவியை துறப்பதற்கு நீங்கள் தயாரா என ரவி கருணாநாயக்கவிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “ ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் மீண்டும் […]

அரசியல் இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்புக்கு சஜித் ஆதரவு: காலாசாரத்தை பாதுகாக்குமாறும் வலியுறுத்து!

  • January 3, 2026
  • 0 Comments

“கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் இலவசக் கல்வியில் மனித வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற விடயங்கள் புகுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவால் C.W.W. Kannangar இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்றைய காலத்திற்கேற்றாற்போல் மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வி முறையானது நவீனத்துவம் மற்றும் புத்தாக்க ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு உட்பட பாரிய புரட்சிகர தொழில்நுட்ப மாற்றங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

76 வருடகால சாபம்: என்.பி.பி. ஆட்சி வழங்கிய பரிகாரம் என்ன?

  • January 3, 2026
  • 0 Comments

” ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe நாடாளுமன்றத்தில் இருப்பது நாட்டுக்கு நல்லது.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர Dayasiri Jayasekara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்து, 76 வருடகால சாபம் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். எனினும், என்.பி.பி. ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் என்ன? 76 வருடகால “சிஸ்டம்” முறையற்றது என விமர்சித்தவர்கள், […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டுக்கு ஆபத்தெனில் ரணில் களத்துக்கு வருவார்: ஐதேக அறிவிப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

“நாடு விழும்பட்சத்தில் சவாலை ஏற்று அதனை நிர்வகிகக்கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எனவே, நாட்டுக்கு ஆபத்தெனில் அவர் பொறுப்பைவிட்டு ஓடும் நபர் கிடையாது.” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, எதிரணி அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகூறி ஆசிபெற்றனர். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சமன் ரத்ன பிரிய கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் முறையான முகாமைத்துவம் இல்லை எனவும், இவ்வாறு […]

அரசியல் இலங்கை செய்தி

சஜித்மீது சரமாரியாக விமர்சனக்கணைகள் தொடுக்கும் ரணிலின் சகா: சங்கமம் தடைபடுமா?

  • January 2, 2026
  • 0 Comments

“ இருப்பதற்கு பிடிக்கவில்லை என்பதால்தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறினேன். எனவே, மீண்டும் அங்கு செல்வதற்குரிய திட்டம் எனக்கு இல்லை.” இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும Ajith Manapperuma தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி UNP ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த அஜித் மானப்பெரும, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் SJP இணைந்தார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலிலேயே அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். எனினும், கடைசி நேரத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டுக்குரிய அரசியல் சமர் 5 ஆம் திகதி ஆரம்பம்!

  • January 2, 2026
  • 0 Comments

பிரதான அரசியல் கட்சிகள் 2026 ஆம் அண்டுக்கான தமது முதலாவது விசேட கூட்டங்களை எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் 6 ஆம் திகதி கூடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டமும் 5 அல்லது 6 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இது […]

அரசியல் இலங்கை செய்தி

ரணிலிடமிருந்து சஜித்துக்கு பறந்த அழைப்பு: அரசியல் களத்தில் நடக்க போவது என்ன?

  • January 2, 2026
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் Sajith Premadasa முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சஜித் பிரேமதாசவை, நேற்று (01) தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அரசியல் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை சஜித் பிரேமதாச உருவாக்கியதில் இருந்து அவருக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் உறவில் முறிவு ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதி […]

error: Content is protected !!