இலங்கை செய்தி

சிங்கப்பூரில் மனைவியை கொலை செய்த இலங்கையர்; தாமாக முன்வந்து பொலிசில் சரண்

மனைவியைக் கொன்ற இலங்கையர் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் கைது செய்யப்பட்டதாக CNA இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

கட்டோங் சதுக்கத்தில் உள்ள Holiday Inn Express ஹோட்டலில் குறித்த நபர் தனது மனைவியைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தியவின்னகேயைச் சேர்ந்த செவ்வந்தி மதுகா குமாரி என்ற 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

செப்டம்பர் 9ஆம் திகதி இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்தரணி ஒருவரைத் தொடர்புகொள்வதற்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் உதவி கோரியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை பொலிஸில் சரணடைந்ததாக மரைன் பரேட் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர்.

பொலிஸாரின் அறிக்கையை மேற்கோள் காட்டி, CNA இணையத்தளம், பொலிசார் ஹோட்டலுக்கு வந்தபோது, ​​இறந்தவர் வெட்டுக் காயத்துடன் அசையாமல் கிடந்ததாக கூறியுள்ளது.

ஹோட்டல் அறையில் கொலைக்கு பயன்படுத்திய கூரிய கத்தியும் கண்டெடுக்கப்பட்டது. சந்தேகநபர் எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மரண தண்டனையை எதிர்கொள்வார் என்று CNA இணையதளம் மேலும் கூறியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content