ஆசியா செய்தி

சீனாவில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான கப்பல் – இருவர் பலி

சீனாவில் போஷான் நகரில் இருந்து குவாங்சவ் நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்றது. அந்த கப்பல் குவாங்சவ் நகரில், லிக்சின்ஷா பாலத்தின் மீது திடீரென மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தின்போது, பாலத்தில் ஒரேயொரு பஸ் சென்று கொண்டிருந்தது. அது ஆற்றுக்குள் கவிழ்ந்தது. பின்னர், இதுதவிர 4 வாகனங்கள் கவிழ்ந்து நீருக்குள் மூழ்கின.

இதில், 2 பேர் உயிரிழந்தனர். 3 பேரை காணவில்லை. கப்பலில் சரக்கு எதுவும் கொண்டு செல்லப்படவில்லை.

கப்பலின் கேப்டனை போலீசார் கைது செய்தனர். அந்த பகுதியில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!