இலங்கை

இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பலர் கைது! ஆயுதங்கள் கைப்பற்றல்

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 28 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உட்பட மூவர் பல ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச ரீதியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி தோட்டா மற்றும் மகசீன், 12 போர் துப்பாக்கியின் 06 தோட்டாக்கள் மற்றும் கையடக்க தொலைபேசியுடன் 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது எண்தன பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை அக்மீமன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 69 தோட்டாக்கள், இரண்டு ரிவோல்வர்கள், ஒரு ஏர் ரைபிள், 12 போர் துப்பாக்கியின் 50 தோட்டாக்கள் மற்றும் பல கத்திகளுடன் கைத்துப்பாக்கியுடன் 73 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்மீமன பகுதியைச் சேர்ந்த நபரே மேல் மாகாண தென் குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கோனகங்கர பிரதேசத்தில் T-56 துப்பாக்கியின் 07 தோட்டாக்கள் உட்பட பல வகையான உயிருள்ள தோட்டாக்களுடன் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தல பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்