இலங்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் சாந்தன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டர்களில் ஒருவரான சாந்தனை உடனடியாக நாடு கடத்துவதற்கான அவசர பயண ஆவணத்தை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி (FRRO) வெளியிட்டுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தற்போது அடைக்கப்பட்டுள்ள சாந்தனை, திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் செல்லவுள்ளனர்.

சாந்தனின் கோரிக்கையின் பேரில், இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் அவருக்கு தற்காலிக பயண ஆவணத்தை வழங்கியது, இப்போது நாடு கடத்த சென்னையிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம்
(FRRO) வெளியேறும் அனுமதியை வழங்கியுள்ளது.

“சாந்தன் டிக்கெட் புக் செய்தவுடன் நாடு கடத்தப்படுவார். அவரை விமான நிலையம் வரை அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன, ”என்று கலெக்டர் எம்.பிரதீப் குமார் கூறியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content