ஆஸ்திரேலியா உலகம் செய்தி

விக்டோரியாவில் குற்றங்கள் வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 12 மாதங்களில் குற்றச் சம்பவங்கள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாகக் குற்றப் புள்ளியியல் நிறுவனம் (CSA) எச்சரித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் சுமார் 6 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, கார் திருட்டு மற்றும் சொத்து தொடர்பான மோசடிகள் கடந்த ஆண்டை விட 14.2 சதவீதம் அதிகரித்துள்ளன.

கார் திருட்டுகளைப் பொறுத்தவரை 37,000-லிருந்து சுமார் 2 இலட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளமை பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாரா ரேஞ்சஸ் (Yarra Ranges), நாக்ஸ் (Knox) மற்றும் மாரூண்டா (Maroondah) ஆகிய பகுதிகள் அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது தவிர, 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக மோசமான குடும்ப வன்முறைத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவர நிபுணர் பியோனா டவுஸ்லி, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி