ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

தென் கொரியாவில் இராணுவ சட்டத்தை அறிவித்த ஜனாதிபதி : அவசரநிலை பிரகடனம்!

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல் இன்று (03.12) அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

வரவு செலவுதிட்ட மசோதா  தொடர்பாக பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள விவாதத்தின்போது  “கம்யூனிச சக்திகளிடமிருந்து” நாட்டைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் நேரலையில் உரையாற்றிய அவர், வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தாராளவாத தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

“நமது தேசிய சட்டமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாகவும், சட்டமியற்றும் சர்வாதிகாரத்தின் குகையாகவும் மாறியுள்ளது, இது நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை முடக்கி நமது தாராளவாத ஜனநாயக ஒழுங்கை கவிழ்க்க முயல்கிறது” என்று யூன் கூறினார்.

யூனின் மக்கள் சக்தி கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட மசோதா தொடர்பாக தொடர்ந்து சண்டையிட்டு வரும் நிலையில் இந்த ஆச்சரியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!