Site icon Tamil News

பிரான்சில் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது

சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நாட்டு மக்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று நாடளாவிய ரீதியில் நடைபெற்ற மே தினப் போராட்டத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்து கொண்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version