ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

ஜப்பானில் தொழில்நுட்ப துறையில் இலங்கை பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜப்பானின் மின்சார விநியோகத் துறையை மேம்படுத்தும் நோக்கில், தனியார் துறையில் வேலை வாய்ப்புக்காக இத்தகைய பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.
ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ, ஜனாதிபதியை சந்தித்த போதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 49 times, 1 visits today)