இந்தியா விளையாட்டு

IPL வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்த ஜடேஜா

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட்களை எடுத்த முதல் இடதுகை பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஒரு ஸ்பின்னராக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ரவீந்திர ஜடேஜா : 151*

2. அக்சர் படேல் : 112

3. ஆஷிஷ் நெஹ்ரா : 106

4. ட்ரெண்ட் போல்ட் : 105

5. ஜாகிர் கான் : 102

அத்துடன் 2267 ரன்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் 1000+ ரன்கள் மற்றும் 150+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராக இருக்கிறார். அந்த பட்டியலில் ப்ராவோ (1560- 183), சுனில் நரேன் (1046 – 163) ஆகியோருக்கு பின் 3-வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே