செய்தி

சிங்கப்பூரில் தொழில் பெற முயற்சிப்பவர்களுக்கு வெளியான தகவல்

சிங்கப்பூரில் தொழில் வழங்கும் போது அனுபவம், திறன்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வதாகக் கூடுதலான முதலாளிகள் கூறுகின்றனர்.

வேலைக்கு ஆள் சேர்க்கும்போது கல்வித்தகுதி அவசியம் என்றபோதும் இவற்றினை கருத்திற் கொள்வது பொருத்தமானது.

மனிதவள அமைச்சு வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிக்கை அதைப் புலப்படுத்துவதாக தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் உதவித் தலைமைச் செயலாளர் Patrick Tay, Facebookஇல் பதிவிட்டார்.

கல்வித்தகுதி எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்தாலும் தகுந்த அனுபவமும் திறனும் இருந்தால் ஊழியர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று 68 சதவீத முதலாளிகள் சொல்வதாக அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் வேலையின்மையையும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் எதிர்கொள்ளத் திறன் மேம்பாடு அவசியம் என Patrick Tay குறிப்பிட்டுள்ளார்.

மாற்றங்களைச் சந்திக்க ஊழியர்கள் புதிய திறன்களுடன் தயாராக இருக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அரசாங்கம், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் முத்தரப்பினருக்கும் இதில் முக்கியப் பங்கிருக்கிறது என்று Patrick Tay கூறினார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content