இந்தியா மத்திய கிழக்கு

காசாவுக்கு மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா

இஸ்ரேல் ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு மருந்து மற்றும் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் மாஸ் இடையேயான போர் வலுத்து வருவதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் இரு நாடுகளிலும் உயிரிழந்து உள்ள நிலையில், ஏராளமானோர் மருத்துவம், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இன்றி காசா பகுதியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவி வழங்குவதாக உறுதியளித்திருந்த நிலையில் இந்திய அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 32 டன் பேரிடர் நிவாரண பொருட்களையும், 6.5 டன் மருந்து பொருட்களையும் விமான மூலம் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்த நிவாரண பொருட்கள் எகிப்து சென்றடைந்து, பின்னர் அங்கிருந்து சாலை வழியாக காசாவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே