ஐரோப்பா செய்தி

58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களின் மோசமான புகைப்படங்கள் – பிரித்தானியாவில் முதியவர் கைது

பிரித்தானியாவில், சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் மோசமான புகைப்படங்களை வைத்திருந்த 85 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பிரித்தானியாவின் Surreyயில் வசித்து வந்த Mundy என்ற முதியவர், தேசிய முகமை குற்றவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த முதியவரிடமிருந்து Floppy discகள், CDகள், USBகள் மற்றும் Hard drive கள் என 47 டிஜிட்டல் சேமிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றில் 31 பிள்ளைகளின் அநாகரீகமான படங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த முதியவரால் இரு தசாப்தங்களாக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 58,000 சிறுவர்களின் புகைப்படங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபர், பதிவிறக்கம் செய்த படங்களில் பெரும்பாலானவை 8 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுடையது என தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்காக இந்த Peer-to-Peer பகிர்வு முறையை பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், குழந்தைகள் தொடர்பினால் தவறான படங்களை முதலில் பார்த்ததாகவும், துஷ்பிரயோகத்தின் வரையறை என்னவென்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது ஆர்வம் இன்பத்திற்காக மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுவர்களின் மோசமான படங்கள் தொடர்பான 3 குற்றங்களை ஒப்புக்கொண்ட முதியவரான Mundyக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content