2024ல் தனிநபரின் வரிச் செலவு 30,000 ரூபாயால் அதிகரிக்கும்
அரசாங்கம் விதிக்க உத்தேசித்துள்ள வரிகள் காரணமாக ஒருவர் 2024 ஆம் ஆண்டு மேலும் 30,000 ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என வெளிப்படுத்துகிறது.
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதுவரை ஒரு இலட்சம் ரூபா வரி செலுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் வசூலிக்கப்படாத வரிப்பணம் 179 பில்லியன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் பிரகாரம் வங்கிக் கணக்குகள் அல்லது சொத்துக்களிலிருந்து வரிகளை உடனடியாகப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





