பொழுதுபோக்கு

திருமணம் செய்யாமலே இரு குழந்தைகளுக்கு தாயான நடிகை : இறுதியில் நடந்த சோகம்

  • October 6, 2025
  • 0 Comments

கன்னட நடிகை பாவனா ராமண்ணா திருமணம் செய்யாமலே கர்ப்பமாகி குழந்தைக்கு தாயாகி உள்ளார். ஆனால், பிறந்த குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்ததால் சோகத்தில் அழுது புலம்பினார். இவர் தமிழில் மோகன் நடிப்பில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் அறிமுகமாகி பிரசாந்தின் விரும்புகிறேன், நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 40 வாயதாகும் பாவனா ராமண்ணாவிற்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும், தாய்மையின் அழகை […]

இலங்கை

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்!

  • October 6, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகைப்பணத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 760 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் உட்பட ஒரு தொகைப்பணமும் குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெரிய நீலாவணை- வீ.சி.வீதியைச்சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் இதற்கு முன்னரும் இச்சந்தேக நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கல்முனை தலைமையக […]

உலகம்

புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மையைக் கண்டுபிடித்ததற்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

  • October 6, 2025
  • 0 Comments

இவ்வாண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் ஷிமோன் சகாகுச்சி, அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த அவர்களின் கண்டுபிடிப்புக்காக இப்பரிசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளியல் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியோருக்கும் அமைதிக்காகப் பாடுபட்டவர்களுக்கும் உலகளவில் உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு திங்கட்கிழமை (6) அறிவிக்கப்பட்ட […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று – வீட்டு வைத்தியம் எடுத்துக்கொள்வோருக்கு எச்சரிக்கை!

  • October 6, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபுகள் வேகமாக பரவி வருகின்ற நிலையில், மக்கள் வீடுகளில் சிகிச்சை எடுப்பதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் XFG மற்றும் XFG.3 தொற்றுக்களின் புதிய திரிபுகள் பரவி வருகின்றன. அதேபோல் ஸ்ட்ராடஸ் (Stratus) மற்றும் நிம்பஸ் ( Nimbus ) (NB. 1.8. 1) போன்ற தொற்றுக்களும் பரவலாக காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த தொற்றால் உடலில் ஏற்படும் கடுமையான வலிக்கு வீட்டிலேயே சிகிச்சை […]

இலங்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மாயமான புறாக்கள் – பொறுப்பாளர் பணியிடைநீக்கம்!

  • October 6, 2025
  • 0 Comments

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருடப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பறவைகள் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் (03) திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பில் அப்பிரிவின் பொறுப்பதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்தவித  தகவலும் கிடைக்கவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெஹிவளை பொலிஸார் […]

இலங்கை செய்தி

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதில் நிலவும் சிக்கல்கள்!

  • October 6, 2025
  • 0 Comments

இலங்கையில் மருந்து பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் தற்போதுள்ள சில சட்டங்கள் தடையாக இருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். அந்த சட்டங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றுவது சிக்கலாக தோன்றினாலும்,  இது தொடர்பான சில சட்டங்களும் விதிமுறைகளும் புதியவை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துக்களை முன்வைத்தார். […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் – ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

  • October 6, 2025
  • 0 Comments

காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் அமைதியைக் கொண்டுவருவது தொடர்பில் பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஹமாஸ் இஸ்ரேலில் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்துவதாக குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையில் திடீரென நேற்று தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும்  […]

இலங்கை

தெமட்டகொடையில் கைவிடப்பட்ட வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

  • October 6, 2025
  • 0 Comments

தெமட்டகொடையில், களனி பள்ளத்தாக்கு ரயில் பாதைக்கு அருகில் கைவிடப்பட்ட ஒரு வீட்டிலிருந்து பல ஆயுதங்களை பம்பலப்பிட்டி காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 9mm துப்பாக்கி, இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 மெகசின் ஆகியவற்றை அந்த இடத்திலிருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். பொரல்லாவின் வனத்தமுல்லையில் இயங்கும் வனாத்தமுல்லே, துமிந்த தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். வனாத்தமுல்ல பகுதியில் இந்த இரண்டு […]

பொழுதுபோக்கு

குடும்பத்தோடு கிடா வெட்டி, பொங்கல் வைத்த தனுஷ்

  • October 6, 2025
  • 0 Comments

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 1ஆம் திகதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்கபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபட்டு சென்றனர். இதையடுத்து படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தை, தாய், தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் செல்வராகவன் குடும்பத்தினர் […]

இலங்கை

இலங்கையின் அலரி, ஜனாதிபதி மாளிகைகளில் இருந்த பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டதா?

  • October 6, 2025
  • 0 Comments

இலங்கையின் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பல மதிப்புமிக்க பொருட்கள் களவாடப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். குறித்த பொருட்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். விழாவொன்றில் உரையாற்றிய அவர், இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விஜேராம மாவத்தையில் உள்ள  உத்தியோகபூர்வ இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான […]

error: Content is protected !!