பொழுதுபோக்கு

ரோஹிணிதான் கல்யாணி என்ற உண்மை மீனாவுக்கு தெரியவரும் தருணம்! அதிரடியான திருப்பங்களுடன் “சிறகடிக்க ஆசை”

  • October 15, 2025
  • 0 Comments

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மை மீனாவுக்கு தெரியவரும் வகையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலில் தன் வாழ்க்கைக்காக பொய்க்கு மேல் பொய் கூறி, அனைத்து திள்ளுமுள்ளு வேலைகளையும் செய்யும் ரோகிணி தான் சீரியலின் ஹைலைட். இவர் என்னதான் கிரிமினல் வேலைகளை செய்தாலம் இறுதியில் முத்து – மீனாவிடம் மாட்டிக்கொள்வார். இந்த நிலையில், ரோகிணியின் தோழி வித்யாவுக்கு கல்யாணம் நடக்கிறது. இந்த கல்யாணத்திற்கு மீனாவையும் அழைத்திருக்கிறார் வித்யா. இந்த […]

இலங்கை

இலங்கையின் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

  • October 15, 2025
  • 0 Comments

இலங்கையின் தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாய் அதிகரித்துள்ளது. சந்தை தரவுகளின்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 342,300 ரூபாயாக அதிகரித்துள்ளது. தங்கத்தின் நேற்று, 337,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்று 365,000 ரூபாயாக இருந்த 24 காரட் தங்கத்தின் […]

பொழுதுபோக்கு

ஆதிரைக்கு kiss குடுத்த FJ… துஷாரிடம் அந்த மாதி கேள்வி கேட்ட பலூன் அக்கா! உச்சம் சென்ற பிக் பாஸ்

  • October 15, 2025
  • 0 Comments

பிக்பாஸ் வீடு என்றாலே அங்கு காதல் இல்லாமல் எப்படி? முதல் சீசன் முதல் இறுதி சீசன் வரை ஏராளமான காதல் ஜோடிகள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருக்கின்றார்கள்.. அந்த வகையில் தற்போது ஆரம்பமாகியுள்ள பிக்பாஸ் சீசன் 9-இலும் புதிதாக இரண்டு ஜோடிகள் நம் கண்களில் பட்டனர். ஆதிரை & எஃப்ஜெ ஆதிரை, எஃப்ஜெயுடன் நெருங்கி பழகி வருகிறார். நேற்று ஆதிரை அமர்ந்து இருக்க அவரின் தோள்மீது கைபோட்டு இருந்த எஃப்.ஜெ திடீரென குனித்து ஆதிரையிடம் பேசினார். இருவரும் மிகவும் […]

இலங்கை

இலங்கையில் பருவமழை குறித்து எச்சரிக்கை – வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம்

  • October 15, 2025
  • 0 Comments

இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ளதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த பருவமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இக்காலப்பகுதியில், நாட்டின் சில பகுதிகளில் 250 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிக மழைவீழ்ச்சி காரணமாக, ஆறுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வெள்ள […]

விளையாட்டு

இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய ஆசிய கோப்பை அலமாரியில் பூட்டிவிட்டு வெளியேறிய தலைவர்

  • October 15, 2025
  • 0 Comments

நடந்து முடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் வெற்றிக் கோப்பை தொடர்பில் இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்நிலையில் போட்டியில் சம்பியனான இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய ஆசிய கோப்பையை தனது அலுவலகத்தில் வைத்து ஆசிய கிரிக்கெட் சபை (Asian Cricket Council) தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) பூட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் சாடியுள்ளன. டுபாயை தலைமையகமாக கொண்டு செயற்படும் ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக பாகிஸ்தானை சேர்ந்த மொஹ்சின் நக்வி (Mohsin […]

உலகம்

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவு

  • October 15, 2025
  • 0 Comments

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் புதிய முயற்சியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்பம், அறிகுறிகள் தென்படும் முன்னரே புற்றுநோயைக் கண்டுபிடிக்க உதவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மார்பகத்தில் புற்றுநோய் உருவாக்கும் ஆரம்ப கட்ட கட்டிகள், பரிசோதனையில் வெள்ளைப் புள்ளிகளாக மட்டுமே தோன்றுவதால், அவற்றைக் கண்ணோட்டத்தில் கண்டறிவது கடினமாகும். ஆனால் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பரிசோதனைகள், இக்கட்டிகளை துல்லியமாகக் கணிப்பதுடன், சிகிச்சையை விரைவாகத் தொடங்கவும் வழிவகுக்கும். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுமார் […]

ஆசியா

சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் பணியாற்றும் வெளிநாட்டு பெண்களுக்காக முக்கிய நடவடிக்கை

  • October 15, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் ஜன்னல்களின் வெளிப்புறத்தை ஆபத்தான முறையில் சுத்தம் செய்யும் பணியில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் அமர்த்தப்படுகின்றனர். இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 15 முதலாளிகள், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதே காலகட்டத்தில், 6 பணிப்பெண்கள் உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவங்களும் பதிவாகி உள்ளது. இது முதலாளிகளின் கவனக்குறைவே காரணம் […]

விளையாட்டு

4 மாதங்களின் பின் லண்டனில் இருந்து நாடு திரும்பிய விராட் கோஹ்லி

  • October 15, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோலி (Virat Kohli), 4 மாத இடைவெளியின் பின்னர் நேற்று இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். லண்டனில் குடும்பத்துடன் ஓய்வை கழித்த அவர், இங்கிலாந்தில் இருந்து நேராக புதுடெல்லி (New Delhi) விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவரை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் கூட்டத்தை தவிர்த்து, சீக்கிரமாக தனது காரில் ஏறி சென்றுள்ளார். ஐபிஎல் தொடரின் பின்னர், மனைவி அனுஷ்கா சர்மா (Anushka Sharma) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் லண்டனுக்கு புறப்பட்டு […]

உலகம்

ஹமாஸ் அமைப்பினர் தமது ஆயுதங்களை களைந்து நிராயுதபாணியாக வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

  • October 15, 2025
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பினர் தமது ஆயுதங்களை களைந்து நிராயுதபாணியாக வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், பலவந்தமாக ஆயுதங்களை களைய வேண்டியிருக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மில்லியுடன் (Javier Milley) வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். ஹமாஸின் ஆயுதங்களை களைவு விரைவில் நடைபெறும் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். அமெரிக்கா முன்வைத்த சமாதான உடன்படிக்கைக்கு அமைய இஸ்ரேல் மற்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பேஸ்புக்கில் அறிமுகமாகும் வேலைவாய்ப்பு அம்சம் – மெட்டாவின் முயற்சி

  • October 15, 2025
  • 0 Comments

பேஸ்புக்கின் (Facebook) தாய் நிறுவனமான மெட்டா (Meta), ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்தாலும் பின்னர் இடைநிறுத்தப்பட்ட ஒரு அம்சத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடிவெடுத்துள்ளது. வேலைவாய்ப்புகளைத் தேடுவதற்கான அம்சத்தை மெட்டா (Meta) மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை முதன்முதலில் 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல பயனாளர்களால் வரவேற்கப்பட்டாலும், ஐந்து ஆண்டுகளுக்குள், இதற்கான ஆதரவை மெட்டா (Meta)நிறுவனம் நிறுத்தியது. ஆனால், தற்போதைய தொழில்துறை சூழ்நிலைகளையும், சமூக வலைத்தளங்களை தொழில்வாய்ப்புக்கான மேடைகளாக மாற்றும் போக்கையும் கருத்தில் கொண்டு, அந்த அம்சத்தை மீண்டும் […]

error: Content is protected !!